Thursday, 24 June 2021

ஜோதிடம் பார்க்கும் முறை

ஜோதிடம் பார்க்கும் முறை இது ஜோதிடரை அணுகும் சாதாரண மக்களுக்கான பதிவு..

முதலில் உங்களுக்கு தகுந்த ஜோதிடரை தேர்ந்தெடுங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கைராசி மருத்துவர் இருப்பதுபோல ஜோதிடர்களும் இருப்பார்கள்

 உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம்
கொடுத்துவிட்டு உம் என்று அமர்ந்திருக்காதீரகள்....

உங்களது பிரச்சனை என்ன  நடக்கும் தசா புக்தி அமைப்புகள் எப்படி உள்ளது  உங்களது தொழில் சார்ந்த மாற்றங்கள் திருமணம் சார்ந்த விஷயங்கள் என்று குறிப்பிட்டு கேள்விகள் கேளுங்கள்..

உங்களது அத்தனை சந்தேகங்களையும் கேள்விகளையும் முன்னரே திட்டமிட்டு
உங்களுக்கான அவர் வழங்கும் நேரத்தில் கேட்டு விடுவதே சிறந்தது 
அதை விடுத்து நீங்கள் நினைக்கும் போதெல்லாம்  அவரை தொந்தரவு செய்வதோ நேரம் காலம் இல்லாமல் கேள்விகள் கேட்பதும் தவறான அணுகுமுறையாகும்...

மேலும் இது சாஸ்திரம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் இதற்கு ஜாதகம் பார்க்கும் நேரம் கூட மிகவும் முக்கியமானது தவறான நேரம் மனநிலையில் சொல்லக்கூடிய கேட்கக்கூடிய பலன்களில் மாறுபாடு கண்டிப்பாக இருக்கும்...

தற்சமயம்  ஜோதிடம் கேட்பதற்கு நேரில் சென்று பார்க்க வேண்டிய அவசியமில்லை போன் மூலமாக தொடர்பு கொண்டு நீங்கள் பேச முடியும் அந்த வகையில் நீங்கள் ஜாதகம் கேட்கும் நேரம் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து பொறுமையாக எந்த தொந்தரவும் இல்லாத வகையில் கேட்பது நல்லது அதைவிடுத்து பயணம் செய்யும் நேரங்களிலோ பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இப்படியெல்லாம் கேட்பது 
கேட்பவர்க்கும் பலனில்லை சொல்பவருக்கு பலனில்லை

 தற்சமயம் நிறைய நண்பர்களுக்கு ஜோதிட அறிவு இருக்கிறது அதனால் ஜோதிடர் செல்லக்கூடிய பலன்களில் நீங்கள்  எந்த விதியைக் கொண்டு சொல்கிறீர்கள் எதன் அடிப்படையில் இந்த பலன் தரும் என்ற கேள்வியையும் அவரிடம் கேளுங்கள் அதை விடுத்து எனதுகடந்தகால வாழ்க்கையை பற்றி சொல்லுங்கள் இந்த காலத்தில் என்ன நடந்தது அந்த காலத்தில் என்ன நடந்தது என்றெல்லாம்  கேட்டுக்கொண்டு இருப்பது என்பது அவருக்கு மட்டுமல்ல அது உங்களுக்கும் காலவிரயம் தான்.... அன்றிருந்த கிரகங்களின் கோச்சார நிலையையும் ஜாதகரின் தசா புத்தி அடிப்படையிலும் பலன்களை கணித்துக் கூறுவது என்பது தேவையற்ற ஒன்றாக இருக்கும் ...

மேலும்
உங்கள் ஜாதகத்தை பார்க்கும் பொழுது உங்களுடைய குணம் நடத்தை முறைகள் உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய இருட்டான பக்கங்கள் என்று அனைத்தையும் ஒரு தேர்ந்த ஜோதிடரால் சொல்ல முடியும் என்றாலும்.... அவைகள் நெகடிவ் வாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மனம் ஏற்க மறுக்கும் இது அனுபவத்தில் கண்ட உண்மை... 

ஜோதிடரிடம் நீங்கள் கேட்டு தெரிந்த எதிர்காலப் பலன்கள் நடக்க ஆரம்பிக்கும் பொழுது அந்த குறிப்பிட்ட ஜோதிடரை  நீங்கள் தொடர்ச்சியாக அணுகுவதும் அவரையே உங்கள் ஆஸ்தான ஜோதிடராக வைத்துக்கொள்வதும் உங்களுடைய சவுகரியம்...

மேலும் முக்கியமாக
எப்பொழுது ஜாதகம் பார்த்தாலும் இலவச பலன் என்று கேட்காதீர்கள் இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு... தன் மண்டையை கசக்கி பிழிந்து அதே நினைவாக தன் வேலைகளையும் மறந்து கிரகங்களின் நினைவிலேயே வாழ்கின்றவர்கள் ஜோதிடர்கள்...

தொழில்முறை ஜோதிடர்கள் எனில் அவர்களின் ஜீவனத்திற்கான  தட்சிணை... ...
வேறு வேலையில் இருப்பவர்கள்  எனில் கூடுதலாக நேரத்தை ஒதுக்கி செய்யும் பொழுது அதற்கான சிரமங்களையும் உணரவேண்டும்
  இலவசமாக பலன் கேட்கும் போது அதன் முக்கியத்துவத்தை உங்களால் உணர முடியாது மேலும் அவர் சொன்ன பலன்களை மறந்துவிட நேரிடலாம்
இதற்கு அப்பாற்பட்டு இலவச ஆலோசனை வழங்குவது ஜோதிடர்களுக்கு மட்டும் அல்ல அதைக் கேட்கும் உங்களுக்கும் கர்மாவை சேர்க்கும் அமைப்பாகும்....

எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று தெரியாமல் சுவாரஸ்யமான பக்கங்களாக நகர்வதே வாழ்வின் சூட்சுமம்...

எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என எல்லாவற்றையும் ஜோதிடர் சொல்லிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமற்றது ...

எப்பேர்பட்ட ஜோதிடராக இருந்தாலும் 75 அல்லது 85 பர்சன்ட்  அளவுதான்  எதிர்காலத்தை சொல்ல முடியும்
ஜோதிடர்கள் கடவுள் அல்ல அதனால் ஓரளவுக்கு உங்களுக்கு 75% ஜாதகத்தை கணித்து சொன்னாலே அது மிகப்பெரிய விஷயமே....

பணம் சம்பாதிக்கும் நோக்கம்  ஒன்றே குறிக்கோளாக கொண்டு யாராலும் ஜோதிடம் கற்க முடியாது கண்டிப்பாக இதற்கு பிரபஞ்சத்தின் துணையும் கடவுளின் அருளாசியும்  இக்கலையின்  மீதான அதீத ஆர்வமே ஜோதிடர்களை உருவாக்கும் என்பதையும் உணர்தல் வேண்டும்.....

No comments:

Post a Comment

உங்களிடம் சூரியன் ஆதிக்கம் உள்ளதா?

ஒரு மனிதனின் பிறப்பு என்பது குறிப்பிட நாளில் நிகழ்வதும் அவனின் நாம எழுத்தாக குறிப்பிட்ட பெயர்கள் அமைவதும்  நம் விருப்பத்தின்படி அமைவது அல்ல....