Monday, 28 June 2021

மகர லக்னம்

எப்பொழுதும் தங்கள் காரியத்திலேயே கண்ணாக இருக்க கூடிய இவர்கள் முதலைகள் போல் பாசாங்கு காட்டி னாலும் தன்னைச் சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாக கவனிக்கும் வல்லவர்கள்...... 

வாய்ப்புகளுக்காக தவம் கிடப்பார்கள் 
கிடைக்கின்ற வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்வார்கள் பொறுமை இவர்களுக்கு அதிகம் 
நின்று நிதானமாக செயல்படக்கூடிய மந்த குணம் இருக்கும் 
பணம்பற்றிய சிந்தனை அதிகம் .தங்கள் பேச்சு திறமையால் பணம் சம்பாதிப்பார்கள். பண விஷயங்களில் தெளிவாகப் பேசுவது மதிப்பு மிக்க பொருட்கள் பத்திரங்களை நிரந்தரமாக வைத்திருப்பார்கள்..

 ரத்தம் சிந்தி உழைத்தால் உழைப்பால் உயரலாம் என்ற தத்துவத்தை உணர்த்தும் ராசி... அபிஜித் நட்சத்திரம் உள்ள தெற்கு ராசி....

நல்ல உழைப்பாளிகள்
உயர்ந்த எண்ணங்களை உடையோர் மிகவும் தெய்வ பக்தி மிக்கவர்களாகவும் நேர்மையான பேச்சு மதிப்பான வாழ்வு கொண்டவராக இருந்தாலும் அடிக்கடி குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும் 

 தன்னை மதிக்காதவரை மதிக்காதவர்கள்.. நினைத்தை செய்து முடித்த பின்பே வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்

 இவர்களுக்கு உதவ கூடிய
லக்னங்களாக ரிஷபம் விருச்சிகம் மகரம் கன்னி  இருப்பார்கள்

உத்திராடம் நட்சத்திரம் ஆசிரியர் மருத்துவர் ப்ரொபசர் சார்ந்த தொழில்களில் இருப்போர் அதிகம் உண்டு
 குழந்தைகள் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் 
ஆன்மீக குருமார்கள் மேல் ஈடுபாடு இருக்கும்

திருவோண நட்சத்திரம்
 சுக போகத்தை விரும்பினால் உண்மையான அன்பு பாசம் கிடைக்காதது ஒன்று கிடைத்தால் ஒன்று இல்லை....
 வயிறு சம்பந்தபட்ட  யூரின் சம்பந்தப்பட்ட உபாதைகள் இருக்கும்
கலை உணர்ச்சி மிக்கவர்கள்
அவிட்டம்
 இரும்பு வாகனம் அடிமை தொழில் சம்பந்தப்பட்ட தொழில்களில் இருப்பவர்கள் குடும்பத்தின் ஆயுள் குறைபாடு உண்டு
 நிதான குணம்...
வேலை என்று வந்துவிட்டால்  இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யக்கூடிய இருப்பார்கள்

5 10-க்குரிய சுக்கிரனே மேலான ராஜயோகத்தை தரக்கூடியவர் 
புதன் 6 9க்கு அதிபதி
 6 க்கு அதிபதியாக வந்தாலும் ஒன்பதாம் அதிபதியாக இருப்பதினால் நன்மை செய்யக் கடமைப்பட்டவர் 
சூரியன் அட்டமாதிபதி நன்மை செய்யவர் அல்ல ஆனாலும் சூரியனுக்கு அட்டமாதிபதி தோஷம் கிடையாது
 சந்திரன் வாழ்க்கைத்துணையை தீர்மானிப்பார்
 மற்றபடி குரு செவ்வாய் ஆதிபத்திய விசேஷமற்றவர்கள் 
வாழ்க்கையில படிப்படியாக சிறிய அளவில் இருந்து முன்னேறி உழைப்பால் முன்னேறும் இவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் போன்ற விஷயங்களெல்லாம்  குறைவே...

Thursday, 24 June 2021

ஜோதிடம் பார்க்கும் முறை

ஜோதிடம் பார்க்கும் முறை இது ஜோதிடரை அணுகும் சாதாரண மக்களுக்கான பதிவு..

முதலில் உங்களுக்கு தகுந்த ஜோதிடரை தேர்ந்தெடுங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கைராசி மருத்துவர் இருப்பதுபோல ஜோதிடர்களும் இருப்பார்கள்

 உங்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம்
கொடுத்துவிட்டு உம் என்று அமர்ந்திருக்காதீரகள்....

உங்களது பிரச்சனை என்ன  நடக்கும் தசா புக்தி அமைப்புகள் எப்படி உள்ளது  உங்களது தொழில் சார்ந்த மாற்றங்கள் திருமணம் சார்ந்த விஷயங்கள் என்று குறிப்பிட்டு கேள்விகள் கேளுங்கள்..

உங்களது அத்தனை சந்தேகங்களையும் கேள்விகளையும் முன்னரே திட்டமிட்டு
உங்களுக்கான அவர் வழங்கும் நேரத்தில் கேட்டு விடுவதே சிறந்தது 
அதை விடுத்து நீங்கள் நினைக்கும் போதெல்லாம்  அவரை தொந்தரவு செய்வதோ நேரம் காலம் இல்லாமல் கேள்விகள் கேட்பதும் தவறான அணுகுமுறையாகும்...

மேலும் இது சாஸ்திரம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் இதற்கு ஜாதகம் பார்க்கும் நேரம் கூட மிகவும் முக்கியமானது தவறான நேரம் மனநிலையில் சொல்லக்கூடிய கேட்கக்கூடிய பலன்களில் மாறுபாடு கண்டிப்பாக இருக்கும்...

தற்சமயம்  ஜோதிடம் கேட்பதற்கு நேரில் சென்று பார்க்க வேண்டிய அவசியமில்லை போன் மூலமாக தொடர்பு கொண்டு நீங்கள் பேச முடியும் அந்த வகையில் நீங்கள் ஜாதகம் கேட்கும் நேரம் தனியாக ஒரு இடத்தில் அமர்ந்து பொறுமையாக எந்த தொந்தரவும் இல்லாத வகையில் கேட்பது நல்லது அதைவிடுத்து பயணம் செய்யும் நேரங்களிலோ பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இப்படியெல்லாம் கேட்பது 
கேட்பவர்க்கும் பலனில்லை சொல்பவருக்கு பலனில்லை

 தற்சமயம் நிறைய நண்பர்களுக்கு ஜோதிட அறிவு இருக்கிறது அதனால் ஜோதிடர் செல்லக்கூடிய பலன்களில் நீங்கள்  எந்த விதியைக் கொண்டு சொல்கிறீர்கள் எதன் அடிப்படையில் இந்த பலன் தரும் என்ற கேள்வியையும் அவரிடம் கேளுங்கள் அதை விடுத்து எனதுகடந்தகால வாழ்க்கையை பற்றி சொல்லுங்கள் இந்த காலத்தில் என்ன நடந்தது அந்த காலத்தில் என்ன நடந்தது என்றெல்லாம்  கேட்டுக்கொண்டு இருப்பது என்பது அவருக்கு மட்டுமல்ல அது உங்களுக்கும் காலவிரயம் தான்.... அன்றிருந்த கிரகங்களின் கோச்சார நிலையையும் ஜாதகரின் தசா புத்தி அடிப்படையிலும் பலன்களை கணித்துக் கூறுவது என்பது தேவையற்ற ஒன்றாக இருக்கும் ...

மேலும்
உங்கள் ஜாதகத்தை பார்க்கும் பொழுது உங்களுடைய குணம் நடத்தை முறைகள் உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய இருட்டான பக்கங்கள் என்று அனைத்தையும் ஒரு தேர்ந்த ஜோதிடரால் சொல்ல முடியும் என்றாலும்.... அவைகள் நெகடிவ் வாக இருக்கும் பட்சத்தில் உங்கள் மனம் ஏற்க மறுக்கும் இது அனுபவத்தில் கண்ட உண்மை... 

ஜோதிடரிடம் நீங்கள் கேட்டு தெரிந்த எதிர்காலப் பலன்கள் நடக்க ஆரம்பிக்கும் பொழுது அந்த குறிப்பிட்ட ஜோதிடரை  நீங்கள் தொடர்ச்சியாக அணுகுவதும் அவரையே உங்கள் ஆஸ்தான ஜோதிடராக வைத்துக்கொள்வதும் உங்களுடைய சவுகரியம்...

மேலும் முக்கியமாக
எப்பொழுது ஜாதகம் பார்த்தாலும் இலவச பலன் என்று கேட்காதீர்கள் இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு... தன் மண்டையை கசக்கி பிழிந்து அதே நினைவாக தன் வேலைகளையும் மறந்து கிரகங்களின் நினைவிலேயே வாழ்கின்றவர்கள் ஜோதிடர்கள்...

தொழில்முறை ஜோதிடர்கள் எனில் அவர்களின் ஜீவனத்திற்கான  தட்சிணை... ...
வேறு வேலையில் இருப்பவர்கள்  எனில் கூடுதலாக நேரத்தை ஒதுக்கி செய்யும் பொழுது அதற்கான சிரமங்களையும் உணரவேண்டும்
  இலவசமாக பலன் கேட்கும் போது அதன் முக்கியத்துவத்தை உங்களால் உணர முடியாது மேலும் அவர் சொன்ன பலன்களை மறந்துவிட நேரிடலாம்
இதற்கு அப்பாற்பட்டு இலவச ஆலோசனை வழங்குவது ஜோதிடர்களுக்கு மட்டும் அல்ல அதைக் கேட்கும் உங்களுக்கும் கர்மாவை சேர்க்கும் அமைப்பாகும்....

எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு வாழ்க்கையில் நாளை என்ன நடக்கும் என்று தெரியாமல் சுவாரஸ்யமான பக்கங்களாக நகர்வதே வாழ்வின் சூட்சுமம்...

எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகின்றது என எல்லாவற்றையும் ஜோதிடர் சொல்லிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமற்றது ...

எப்பேர்பட்ட ஜோதிடராக இருந்தாலும் 75 அல்லது 85 பர்சன்ட்  அளவுதான்  எதிர்காலத்தை சொல்ல முடியும்
ஜோதிடர்கள் கடவுள் அல்ல அதனால் ஓரளவுக்கு உங்களுக்கு 75% ஜாதகத்தை கணித்து சொன்னாலே அது மிகப்பெரிய விஷயமே....

பணம் சம்பாதிக்கும் நோக்கம்  ஒன்றே குறிக்கோளாக கொண்டு யாராலும் ஜோதிடம் கற்க முடியாது கண்டிப்பாக இதற்கு பிரபஞ்சத்தின் துணையும் கடவுளின் அருளாசியும்  இக்கலையின்  மீதான அதீத ஆர்வமே ஜோதிடர்களை உருவாக்கும் என்பதையும் உணர்தல் வேண்டும்.....

Wednesday, 9 June 2021

கும்ப லக்னம்

கும்பத் திடம் இருக்கும் இரகசியம் வாங்க முடியாது என்பதற்கு ஏற்ப எதையும் வெளிக்காட்டாத இயல்புடையவர்கள்  கும்ப லக்னத்தை சேர்ந்தவர்கள் 

தெய்வ நம்பிக்கை ஆச்சாரஅனுஷ்டானங்களை விருப்பமாக செய்யும் இயல்பு இவர்களுக்கு இருக்கும்

 கால புருஷனின் ஆசையை நிறைவேற்றும் பதினொன்றாம் வீடாக கும்பம் வருவதனால் இவர்கள் விருப்பப்பட்டது எல்லாம் நிறைவேறும் அமைப்பு இவர்களுக்கு உண்டு
அதே இடம் பாதகாஸ்தானமாக வருவதாலும் தந்தையுடன் கருத்துவேறுபாடு 
தந்தை தொழில் பங்கு மூலம் நஷ்டம் அடைவது அல்லது இவர்கள் வளர வளர தந்தைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு 

இரண்டாம் வீடு
 மீனம் கால புருஷனுக்கு 12 மிட அதிபதி 12ல் நீச்சம் ஆதலால் எவ்வளவு பணம் வந்தாலும் சேர்த்துவைக்க விடுவதில்லை

 குரு கடகத்தில் உச்சம் எனவே வாக்கு சார்ந்த வேலை ஆசிரியர் பேராசிரியர்கள் வக்கீல் நீதித்துறையில் உரிமைக்கு பாடுபடக்கூடியவர்கள் ஜோதிடர்கள் அருள்வாக்கு
அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்கள் போக்குவரத்துத் துறையில் இருப்பவர்கள்  மருத்துவர்கள் அதிகம்
பெரும்பாலோர் வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதி செய்தல் போதைவஸ்து விற்பனை செய்தல் 
பங்குச் சந்தை தொழில்களில் இருப்பார்கள் வாழ்ந்து கெட்ட வம்சமாகஇருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு

பொதுவாக கும்ப ராசி ஆன்மீகம் சார்ந்தவர்கள்  சன்னியாசி வாழ்க்கைக்கு சம்பந்தமுடையது 

கும்பலக்னம் மற்றவர்களை மதிக்கும் பொழுது நல்ல காலம் உண்டு 

கும்பத்துக்கும் கோமாளி ராஜாவுக்கும் சோதிடம் சொல்லாதே என்ற பழமொழி ஒன்று உள்ளது கும்ப லக்னத்தில் ஜோதிட பலன் சொன்னால் அது ஜாதகருக்கு பொருந்தாது அவரின் நவாம்ச லக்னம் எதுவோ அதனை வைத்து பலனாக செல்லும் பொழுது அதற்கு சரியான பலனைத் தரும் இப்படிப்பட்ட கருத்தும் ஜோதிடத்தில் 

 கும்பத்தை பிறந்தவர்கள் மனதில் எப்பொழுதும் இரகசியங்களை புதைந்து கிடக்கும் அவரிடமிருந்து ரகசியத்தை யாரும் அவ்வளவு எளிதில் பெற முடியாது நிறைகுடம் போல் பரமசாது போல் காணப்பட்டாலும் கோபம் வந்தால் பொங்கி எழுந்து விடுவார்கள்


இவர்களுக்கு சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் ஆலோசனை அறிவுரை கூறி வழிநடத்த ஏற்றவர்கள்
 விருச்சிகம் தனுசு ராசி சேர்ந்தவர்களுக்கு இவர்களுக்கு உதவ முன்வருவார்கள் கும்ப ராசியினருக்கு எப்போதுமே தனுசு ராசியின் மீது ஒரு ஈர்ப்பு இருக்கும்
 ரிஷப ராசி இவர்கள் பெரும்பாலும் ஒத்து வருவதில்லை

 இரத்த சம்பந்தமான பிரச்சனைகள் காலில் காயங்கள் ஏற்படுதல் பல் காது மற்றும் கை கால் மூட்டுகளில் வேதனைகள் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அல்லது அல்சர் போன்றவை ஏற்படுகிறது

 எதிலும் தாமதம் உண்டு இவர்கள் மிகவும் பொறுமையாகவும் அது தாமதத்துடன் நடந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்

 பெரும்பாலும் கிழக்கு இவர்களுக்கு நன்மை தரும் வடகிழக்கு நன்மை செய்வதில்லை

 கும்ப லக்னத்தில் வாழ்க்கை துணையை அனுசரித்து சொல்வதே 
சிறப்பானது

மற்றவர்களை மதிக்காத பண்பும் பழிவாங்கும் குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் அளவுக்கு மீறி தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் அதனால் அவமானம் அடையும் நிலையும் ஏற்படும் குடும்பத்தில் என்ன செய்தாலும் குறை சொல்ல கூடியவராகவும் பெரும்பாலானவர் இருப்பார்கள்

அவிட்டம் 3 4 பாதங்கள் பிறந்தவர்கள் தன்மானத்தோடு இருப்பார்கள் அதனாலேயே அடிக்கடி இடமாற்றம் இருக்கும் 
அதிட்டம்மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் இன்சூரன்ஸ் கம்பெனி
 உபகரணங்கள் விவசாய அதிகாரிகள் 
கால்நடை மருத்துவர்கள் போன்ற துறைகளில் முன்னேற்றம் அடைவார்கள் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் வக்கீல் ஸ்டெனோகிராஃபர் மொழிபெயர்ப்பாளர்கள் நீதிபதி
 தீயணைப்பு துறை போன்றவற்றில் இருக்கலாம் எதையும் அனுசரித்துப் போக தெரியாததால்தெரியாததால் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்ற விஷயங்களை பெறுவதில் சிரமம் அடைவார்கள் மனசாட்சிப்படி நடக்கிறேன் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வார்கள் 

சதயம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் அணுஉலை கெமிக்கல் இதய அறுவை நிபுணர் பிசியோதெரபிஸ்ட் இரும்பு சம்பந்தப்பட்ட கடைகள் பேராசிரியர்கள்  வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி ஷேர் மார்க்கெட் தொழில் உள்ளோர் அதிகம்

பூரட்டாதி
 மருத்துவர்கள் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் அதிகம் உண்டு
 கடன் வாங்குவது அறவே தவிர்த்தல் வேண்டும்

சனீஸ்வர பகவானே லக்னாதிபதியாக இருப்பதால் இவர்கள் அவ்வப்போது திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி வருதல் சிறப்பு தரும்

Friday, 21 May 2021

soul mate என்னும் ஆத்ம துணை

நமது வாழ்வில் நம்மோடு சேர்ந்து பயணிக்கும் அனைத்து உறவுகளிலும் நமது முன் ஜென்ம கர்மாவுடன் தொடர்புடையவர்களே...
தாய் தந்தைக்கும் குழந்தைக்குமான உறவு 
கணவன் மனைவிக்கிடையேயான உறவு சகோதர உறவுகள் மற்றும் நம்மை சுற்றியிருக்கும் அனைத்து உறவுகளும் மேலும் நாம் பார்க்கும் சந்திக்கும் நபர்களும்    ஏதோ ஒரு வகையில் நம்முள் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்ற நபர்களும் நம்முடன் ஒரு வகையில் பூர்வஜென்ம தொடர்பில் தொடர்பில் இருந்தவர்களே ....அந்த பூர்வ ஜன்ம  பற்று அறுந்து விடாமல் நம்முடன் பயணிக்கும் அவர்களின் தொடர்பு இருந்து கொண்டே தான் இருக்கும் இந்த ஜென்மத்திலும். உங்கள் ஆத்மாவிற்கு துணையாக உங்களோடு சேர்ந்து பயணிக்கும் அந்த நபர் நீங்கள் வாழ்க்கையில் கண்ட தருணத்தில் சில அறிகுறிகள் மூலமாக அதனை நீங்கள் எளிதில் கண்டு உணரலாம் . அந்த நபரை பார்த்த தருணம் உங்களுள்  ஒர் பரவசம் ஏற்பட்டதை உணர்ந்திருப்பீர்கள்     நேரம் கடந்து மணிக்கணக்கில் பேசினாலும் அதே உற்சாகத்துடன் உங்களால் அவருடன் பேச முடியும் என்றால் என்றால் அந்த நபர் உங்கள் ஆத்மாவின் தொடர்பு பெற்றவரே.. உங்களை அறியாமலேயே அவரின் நினைவுகளால் அதிகம் ஆட்கொள்ள படுவீர்கள்..

நீங்கள் அவரை அதிகம் நினைக்கும் தருணங்கள் அந்த நபர் உங்களை தொடர்புகொண்டு பேசுவார் அல்லது உங்களுக்கு ஏதேனும் தகவல்களை அனுப்புவார் இந்த மாதிரி நிகழ்வுகள் அடிக்கடி உங்களுக்குள் ஏற்படும் அப்படிப்பட்ட நபர் தான் உங்கள் ஆத்மாவின் துணையாக இந்த ஜென்மத்தில் உங்களோடு பயணிக்க வந்தவர் .
 அந்த நபரிடம் தான் உங்களது எல்லா ரகசியங்களையும் உங்களை அறியாமலேயே நீங்கள் சொல்லக் கூடியவராகவும் இருப்பீர்கள்.

 சில நேரங்களில் உங்களுக்கு இடையேயான நேரடி தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தாலும் உங்கள் ஆழ்மன தொடர்பு என்பது இருந்துகொண்டேதான் இருக்கும் 
அந்த நிலையில் அவர் மீண்டும் உங்களிடம் வந்து பேசும்பொழுது அதே பழைய உற்சாகத்துடனும்  அதே பழைய நேசத்துடன் உங்களால் பழக முடிகிறது என்றால் அவர் உங்கள் ஜென்மாந்திர தொடர்புடைய ஆத்ம நட்பே. 

முற்பிறவி தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் உங்களுக்கு நல்லது செய்வதற்காகவும் அந்த ஆத்மா தற்பொழுது உங்களையே சுற்றி வருவதையும் நீங்கள் நன்கு உணர முடியும் அவரின் அருகாமை அவரின் இருப்பு உங்களை அதிகப் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யும்  ஏன் இவர் நம்மில் இவ்வளவு மாற்றங்கள் செய்கிறார் என்று அடிக்கடி நீங்கள் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள் இது அத்தனைக்கும் விடை அவர் உங்கள் ஆத்மாவின் நட்பாக அமைந்து உங்களோடு சேர்ந்து பயணிக்கவே இந்த ஜென்மத்திலும் பிறந்து இருக்கிறார் என்பதே 
உங்களின் முதல் சந்திப்பு அல்லது முதல் பார்வையே அதை உங்களுக்கு உணர்த்தியிருக்கும்...

அப்படிப்பட்ட ஒரு நபரை நீங்கள் வாழ்க்கையில் இன்னும் சந்திக்கவில்லை என்றால் பொறுத்திருங்கள் காலம் ஒருநாள் உங்களை அவருடன் சேர்த்து பயணிக்க வைக்கும் 

மேஷம்

தனது பொருளையும் சுகத்தையும் காத்துக் கொள்ள முடியாத சூழ்நிலை இந்த ராசிக்கு உண்டு....இரண்டாமிடம் சுக்ரன் வீடாக இருப்பதனால் எதிர்பாலினம் பற்றியும்  வாகனம் பற்றியும் அதிகம் பேசுவார்கள்  பேச்சில் வசீகரத் தன்மை தன்மை இருக்கும் இவர் எளிதில் மற்றவர்களை மூளைச்சலவை செய்யக்கூடியவர்கள் அதேநேரத்தில் இவர்களும் மற்றவர்களின் பேச்சுக்கு எளிதில் ஆட்பட்டு விடுவர் பெண் ராசியாக இரண்டாம் இடம் இருப்பதினால் கலை துறையை மூலமாகவோ பெண்கள் மூலமாகவோ வருமானத்திற்கு வழி உண்டு
எதிலும் துணிந்து செயல்படும் தன்மை தலைமை தாங்குதல் மற்றவர்களை தனக்கு அடிமையாக்க முயலுதல் போன்ற குணம் அதிகம் கொண்டவர்கள் மேஷ ராசி அன்பர்கள்... கோபம் தலைக்கு ஏறினால் தலையில் அடித்துக் கொள்ளும் பழக்கம் மேஷராசிக்கு உண்டு.இவர்கள் எப்படி வாழ்வார்கள் என்பதை காட்டிலும் எப்படி வாழவேண்டும் என்பதை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் பாரபொருளாதார உயர்வு பெற வேண்டுமெனில்முதலில் செய்ய வேண்டியது ஆலய வழிபாடுகள் கோயில் வழிபாடுகள் இறை வழிபாடுகளை அதிகம் மேற்கொள்ளவேண்டும் உடன் பிறந்தவர்களிடம் அதிக பாசம் உண்டு என்றாலும் கோபத்தின் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களால் அவர்களே இவர்களுக்கு சில நேரங்களில் எதிராக செயல்படுவார் கள் புதன் இவர்களுக்கு ஆறாம் அதிபதியும் பெறுவதனால் .நான்காமிடம் சந்திரன் வீடாக இருப்பதனால் தாய் மீது அதிக பற்று கொண்டவர்கள் அதிக உரிமையும் தாயிடம் எடுத்துக்கொள்வார்கள் தாயும் இவரிடம் அதிக உரிமையுடன் பழகுவார் ஐந்தாமிடம் சிம்மராசி ஆக இருப்பதனால் குழந்தைகள் அதிக பிடிவாதம் கொண்டவர்கள் தன் குழந்தைகளை எப்படியேனும் உயர்த்தி விட வேண்டும் என்று துடிப்பார்கள் அதற்கு ஊன்று கோலாகவும் இவர்கள் அமைவார்கள் இவர்கள் ஆத்மபலம் மிக்கவர்கள் கண்டிப்பு நிறைந்தவர்கள் பெரும்பாலும் இவர்களுக்கு வரக்கூடிய நோய்களாக ஆறாம் வீடு அதாவது கன்னி ராசி சம்பந்தப்பட்ட நோய்களான ரத்த நாளங்கள் நரம்பு பிரச்சனை போன்றவைகள் அதிகம் ஏற்படும் அதேநேரத்தில் மேஷராசிக்காரர்களுக்கு லக்னத்திலேயே சூரியன் உச்சம் அடைவதாலும் நெருப்பு ராசியாக இருப்பதாலும்  தலையை குறிக்கக்கூடிய ராசியாக இருப்பதினாலும் அதிக தலைவலி கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முதுகுதண்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஜாதகர் சந்திப்பார் ஏழாம் பாவகம் சுக்கிரன் வீடாக வருவதினால் அழகான மனைவியை கொண்டவர்களாகவும் தாய்மைப் பண்புடன் நடக்கக்கூடிய மனைவியாகவும்  மனைவி வந்த பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம் வசதிகளைப் கூடியவர்களாகவும் இருப்பார்கள்  பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் மாடிவீட்டில் வசிக்கக் கூடியவராகவும் வீட்டில் மேஜையின் மீது அமர்ந்து உண்ணும் பழக்கம் உடையவராக இருப்பார்கள் இவர்கள் பயம் அறியாதவர்கள் சில நேரங்களில் அந்த பயம் அற்ற தன்மையே இவர்களுக்கு பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடும். எட்டாம் வீடு விருச்சகமாக இருப்பதனால்  அதிலும் நீர் ராசியாக இருப்பதினால் நீரில் கண்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு வாகன விபத்துக்கள் தலையில் அடிபடுதல் கை கால் எலும்பு முதுகெலும்பு பிரச்சனைகள் ஏற்படலாம் ஒன்பதாம் இடம் தனுசுவாக இருப்பதினால் ஏற்றுமதி இறக்குமதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சட்டம் ஆலோசனை உயர்கல்வி படிப்புகள் சிறப்பு தரும் இவர்களின் ராசியாதிபதி மகரத்தில் உச்சம் பெறுவதால் எதனையும் எளிதாக பெற இயலாமல் அதிக விடாமுயற்சி கொண்டு ஈடுபட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும்  9ஆம் வீடு சர ராசியாக அதாவது பூமி ராசியாக இருப்பதினால் கௌரவம் அந்தஸ்து என்பது இவர்களுக்கு கீழ்நிலையிலிருந்து முன்னேற்றம் பெற்று உயர்ந்த நிலையில் இருப்பார்கள் அரசு பணி வீடு வாகனம் சம்பந்தப்பட்ட தொழில்கள் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் கடுமையான உழைப்பு போடகூடிய தொழில்கள் போன்றவைகள் பெரும்பாலும் இவர்களுக்கு அமையும்  தன் நிலையிலிருந்து விட்டுக் கொடுக்காத பிடிவாத குணம் கொண்ட இவர்கள் சீருடை பணியாளர்கள் உயரதிகாரிகள் மருத்துவர் குணப்படுத்தும் healers அரசு சார்புடைய பணிகள் ஆசிரியர் போன்றவைகளில் பரிணமிக்கூடியவர் பதினொன்றாம் இடம் சனியின் வீடாக இருப்பதினால் பெரும்பாலும் இவர்கள் அதிக லாபங்களை எதிர்பார்ப்பது கானல் நீராகவே சென்றுவிடும் 12-ஆம் இடம் குருவின் வீடாக இருப்பதனால் செலவுகள் அதிகம் செய்யக் கூடியவர்களாகவும் செல்வத்தை ஈட்டினாலும் அதற்கேற்றார்போல் செலவு செய்வதிலும் ஆர்வம் உடையவர்கள்
பொதுவாக இவர்களுக்கு மகான்கள் தரிசனம் ஆலய தரிசனம் செய்தல் கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியம் அறக்கட்டளைகள் அமைத்த அதற்கு தலைமை தாங்கும் பொறுப்பு சங்கத்திற்கு தலைமை ஏற்றல் போன்றவைகள் இயல்பாகவே அமையும் உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்களால் அதிகம் தாக்கம் அடைவார்கள்.
மேஷம் சர ராசி சரம் என்றால் இயங்கிக் கொண்டிருப்பது இவர்களை கொஞ்சம் உரசு விட்டால் போதும் உடனே பெற்றுக் கொள்வார்கள் சனி சோம்பல் காரகன் அவர் நீசம் அடையும் இராசி என்பதினால் இவர்கள் சுறுசுறுப்பானவர்கள் சூரியன் உச்சம் அடையும் ராசி மேஷம் எனவே இவர்கள் புகழ் விரும்பிகள் செவ்வாய் ஆட்சி பெறும் ராசி மேஷம் எனவே அதிக முன்கோபம் அடிதடி போன்ற விஷயங்கள் உண்டு.

Tuesday, 27 April 2021

வக்ர கிரகங்கள்

வக்ர கிரகங்கள் அதன் காரகத்துவங்களை ஜாதகருக்கு அதிகப்படியான ஞானத்தையும்  புரிதலையும் வழங்கும்.

 உதாரணமாக
சனி வக்ரம் பெற்றவர்கள் தொழிலில் அதிகப்படியான அறிவினைப் பெற்றிருப்பீர்கள்.

 குரு வக்ரம் பெற்றவர்கள் கடவுள் மதம் குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் அதிக ஞானம் பெற்றவர்களாக இருப்பார்கள். 

புதன் வக்ரம் எழுத்துத் துறையில் சிறப்பு ஞானத்தைப் பெற்றிருப்பார்கள்.

 செவ்வாய் வக்ரம் வீடு நிலம் மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக தொகை ஞானத்தைப் பெற்றிருப்பார்கள்...

சுக்கிரன் வக்ரம் காதல் காமம் சார்ந்த விஷயங்களில் சிறந்த  புரிதலையும் வேறுவிதமான எண்ணங்களையும் பெற்றிருப்பார்கள்..

உங்களிடம் சூரியன் ஆதிக்கம் உள்ளதா?

ஒரு மனிதனின் பிறப்பு என்பது குறிப்பிட நாளில் நிகழ்வதும் அவனின் நாம எழுத்தாக குறிப்பிட்ட பெயர்கள் அமைவதும்  நம் விருப்பத்தின்படி அமைவது அல்ல....